ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு!

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.

TNN 12 Jul 2016, 6:22 pm
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.
Samayam Tamil nifty tops 8500 to end at highest close since august 2015
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு!


சர்வதேச காரணங்கள், இந்திய பங்குச்சந்தைகளுக்கு சாதகமாக உள்ளன. அத்துடன், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகளுக்கு, அந்நிய முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால், கடந்த 2 நாட்களாக, இந்திய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகின்றனர்.

குறிப்பாக, இன்றைய வர்த்தகத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் ரூ.1,056 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால், வங்கி, ஐடி துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விலை அதிகரித்தன.

முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை உயர்வுடன் காணப்பட்டன. இதனால், வர்த்தகம் முடியும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் நீடித்தது.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வுடன் 27,808 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 53 புள்ளிகள் அதிகரித்து 8,521 புள்ளிகளாகவும் முடிந்தது. நிஃப்டி புள்ளிகள் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், அதிகபட்ச புள்ளிகளில் முடிந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்