ஆப்நகரம்

தமிழக முதல்வருடன் நிதி ஆயோக் ஆலோசனை!

பட்ஜெட் அம்சங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

Samayam Tamil 26 Feb 2022, 12:26 pm
தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்னதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதி ஆயோக் அமைப்புடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
Samayam Tamil TN govt


சென்னை வந்துள்ள வி.கே.சரஸ்வத் தலைமையிலான நிதி ஆயோக் உறுப்பினர்கள் நேற்று (பிப்ரவரி 26) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இக்கூட்டத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே உள்ள நல்லுறவு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பும் ஒன்றிணைந்து செயல்படுவது, நிதியாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பட்ஜெட் தொடர்பான அம்சங்கள் குறித்தும் முதல்வருடன் நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதன் பிறகு, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து பட்ஜெட் பற்றிய முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

நலிவடைந்துவரும் அப்பளத் தொழில்… முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்கள்!
நிதி ஆயோக் அமைப்பு தயாரித்த ’இந்தியாவின் நகர்ப்புற திட்டமிடல் சீர்திருத்தம்’ தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நிதி ஆயோக் உறுப்பினர்கள் வழங்கினர். தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்