ஆப்நகரம்

வருமான வரித் தாக்கல்: இனி இது தேவையில்லை - ஹேப்பி நியூஸ்!

வருமான வரித் தாக்கலின்போது பங்கு வர்த்தகம் தொடர்பான ரசீது அடிப்படையில் தகவல்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று வருமான வரித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Sep 2020, 12:09 pm

வருமான வரித் தாக்கல் செய்யும்போது, பங்கு வர்த்தகர்கள், தின வர்த்தகர்கள் தாங்கள் வாங்கிய, விற்ற ஒவ்வொரு பங்கு, சரக்கு சார்ந்த தகவல்களை ரசீது மூலம் தெரிவிக்க வேண்டுமென கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.
Samayam Tamil ITR Filing


இந்நிலையில், பரிவர்த்தனைகள் தொடர்பாக ரசீது அடிப்படையில் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

300 ரூபாய் போதும் - ரூ.1.7 கோடி சம்பாதிக்கலாம்!

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்கு வர்த்தகர்கள்/தின வர்த்டகர்கள் 2020-21ஆம் ஆண்டுக்கு வருமான வரித் தாக்கல் செய்யும்போது ரசீது அடிப்படையில் பரிவர்த்தனை விவரங்களை தெரிவு செய்ய வேண்டுமென சில ஊடகங்களில் செய்திக வெளியாகியுள்ளன.

பங்கு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமான குறுகிய கால மூலதன லாபம் அல்லது தொழில் வருமானமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், சம்பந்தப்பட்ட பங்குகளை ஓராண்டுக்கும் குறைவான காலகட்டத்திற்கே அவர்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றனர்.

ஓராண்டுக்கும் மேல் தங்கள் வசம் இருக்கும் பங்குகளுக்கு மட்டுமே ரசீது அடிப்படையில் தகவல்களை தெரிவுசெய்ய வேண்டும். குறுகிய கால பங்கு டீலிங்களுக்கு ரசீது அடிப்படையில் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை. எனவே, தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானவை” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்