ஆப்நகரம்

EMI சலுகை நீட்டிக்கப்படுமா? வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன?

ஆகஸ்ட் மாதத்தைத் தாண்டியும் கடன் தவணைச் சலுகையை நீட்டிக்க வேண்டுமா வேண்டாமா என்று ஸ்டேட் பேங்க் இந்தியா தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jul 2020, 7:36 pm
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்ததால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமானது. இதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மார்ச் 27ஆம் தேதியில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Samayam Tamil EMI


இதன்படி மே 31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதிலிருந்து கடனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்பட்டதால் ஈஎம்ஐ சலுகைக் காலமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31 வரையில் யாரும் ஈஎம்ஐ கட்டத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஈஎம்ஐ சலுகையை நீட்டிப்பதற்கு வங்கிகள் தரப்பில் ஆதரவு வரவில்லை. இச்சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டால் வங்கிகளின் சொத்து மேலாண்மை நடவடிக்கை பாதிக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்களிடையே கடனைத் திருப்பிச் செலுத்தும் வழக்கத்தில் பின்னடைவு ஏற்படும் எனவும் வங்கிகள் கூறுகின்றன.

ஈஎம்ஐ சலுகையால் வங்கிகளுக்கு பாதிப்பா?

இதற்கு முன்னர் பல்வேறு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் தற்போது குரல் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் இந்தியா வங்கியின் தலைவர் ராஜ்னிஷ் குமார் பேசுகையில், “ஆகஸ்ட் மாதத்தைத் தாண்டியும் கடன் சலுகையை நீட்டிப்பதற்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நான் மட்டுமல்லாமல் பல்வேறு வங்கி அதிகாரிகளும் இதையே கூறுகிறார்கள். மக்களுக்கு ஆறு மாதங்கள் சலுகை வழங்கியதே போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.

ஈஎம்ஐ சலுகை நீட்டிக்கப்படுமா?

ஊரடங்கு தளர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாலும், மொத்தமாகக் கடனைச் செலுத்தினால் கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் வங்கித் துறை தரப்பில் ஈஎம்ஐ சலுகை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ஈஎம்ஐ சலுகையைக் கண்டிப்பாக மேலும் நீட்டிக்கக்கூடாது என்று மத்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு சலுகையை நீட்டித்தால் கடனை முறையாகச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் இனி கடனைச் செலுத்தாமல் இழுத்தடிக்கத் தொடங்குவார்கள் என்று அவர் எச்சரித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்