ஆப்நகரம்

ITR filing: இனி வங்கியிலேயே செக் பண்ணலாம்!

வருமான வரி தாக்கல் விவரங்களை இனி வங்கி, தபால் நிலையங்களிலேயே பரிசோதிக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

Samayam Tamil 5 Sep 2020, 4:18 pm
தனிநபர் ஒருவர் ஒரு ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியிலோ அல்லது தபால் நிலையங்களிலோ சேமித்து வைத்த பணத்தை எடுத்தால் அவர்களுக்கு 2 சதவீத டிடிஎஸ் பிடிக்க வேண்டும் என்பது வருமான வரி சட்டத்தின் பிரிவு 194N, 1961-இன் கீழ் கட்டாயமாகும். ஆனால் முந்தைய மூன்று நிதியாண்டுகளாக வாடிக்கையாளர் வருமான வரி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத டிடிஎஸ் பிடிக்கப்பட வேண்டும். அதேபோல, ரூ.1 கோடிக்கு மேல் 5 சதவீத டிடிஎஸ் பிடிக்கப்பட வேண்டும்.
Samayam Tamil tax


வாடிக்கையாளர் முந்தைய ஆண்டில் தனது வருமான வரியைத் தாக்கல் செய்தாரா இல்லையா என்பது வங்கிக்கோ அல்லது தபால் நிலையத்துக்கோ தெரியாது. அப்படித் தெரிந்துகொள்ளும் வசதியை வருமான வரித் துறையும் மத்திய அரசும் இப்போது ஏற்பாடு செய்துள்ளன. இதன்படி, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் இப்போது வாடிக்கையாளரின் நிரந்தர கணக்கு எண் (பான்) அடிப்படையில் வருமான வரித் தாக்கல் நிலையைச் சரிபார்க்கலாம் . இந்த வசதி மூலம் வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194N இன் கீழ் பொருந்தக்கூடிய டிடிஎஸ் விகிதத்தை பணத்தைத் திரும்பப் பெறும் நபரின் பான் விவரத்தைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.

Gold Loan: மிகக் குறைந்த வட்டியில் எங்கு கிடைக்கும்?

இந்த வசதி ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. www.incometaxindiaefiling.gov.in என்ற முகவரியில் வாடிக்கையாளர்களின் வரித் தாக்கல் விவரங்களை வங்கிகளும் தபால் நிலையங்களும் தெரிந்துகொள்ள முடியும். வரி செலுத்துவதை ஊக்குவிக்க அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சிலர் வரி செலுத்தத் தவறுகின்றனர். வருமான வரியைச் செலுத்தாமலேயே வங்கியில் அதிகப் பணத்தை எடுப்பதாக வருமான வரித் துறை குற்றஞ்சாட்டுகிறது. இதை வங்கி மட்டத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதத்தில்தான் தற்போதைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்