ஆப்நகரம்

பெண் குழந்தைகளுக்கு லட்சங்களில் லாபம்.. அதிக வட்டி தரும் செல்வமகள் சேமிப்பு திட்டம்!

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பெண் குழந்தைகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Apr 2023, 5:45 pm
பெண் குழந்தைகளுக்காக பணத்தை சேமித்து பெருக்குவதற்காகவே செல்வமகள் சேமிப்பு திட்டம் (Selvamagal Semippu Thittam) எனப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை (Sukanya Samriddhi Yojana) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும்.
Samayam Tamil girl child
girl child


செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், பெண் குழந்தை வளர்ந்த பிறகு லட்சங்களில் லாபம் கிடைக்கும். இத்திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்பது பற்றியும் சலுகைகள் மற்றும் பலன்கள் பற்றியும் பார்க்கலாம்.

பெண் குழந்தைகளுக்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல சாய்ஸ். குழந்தை பருவத்திலேயே பெண்களுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால், அந்த குழந்தை வளர்ந்து 21 வயதை தொட்டதும் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகையை பயன்படுத்தி கல்வி, தொழில், திருமணம் போன்ற செலவுகளை சந்திக்கலாம்.

இதுமட்டுமல்லாமல், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 8% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. எனவே, ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 8% அற்புதமான வட்டி விகிதம் கிடைக்கும். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும்.

இத்திட்டத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகைக்கு முழு வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் படம் மற்றும் முகவரி சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 6000 ரூபாய். மொத்தம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஆக 15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 90,000 ரூபாய்.

இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 21 ஆண்டுகள். ஆக, தற்போதைய 8% வட்டி விகிதத்தில் 21 ஆண்டுகள் நிறைவில் பயனாளிக்கு 2,79,204 ரூபாய் என கிட்டத்தட்ட 2.80 லட்சம் ரூபாய் மெச்சூரிட்டியாக கிடைக்கும். இதில் உங்களுக்கு வட்டியாக மட்டுமே 1,89,205 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்