நெட் பேங்கிங் எனப்படும் ஆன்லைன் வங்கிச் சேவை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதன்மூலமாக, புதிதாக பணம் அச்சடிப்பதை தவிர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், தற்போது நெட் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் இந்தச் செயல்பாடுகளுக்கு மாதந்தோறும் கணிசமான கட்டணத்தை, வங்கி நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. எம்டிஆர் என்ற பெயரில், இந்த கட்டணம் மத்திய அரசுக்கு செலுத்தப்படும். இந்நிலையில், தற்போது டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும் போது பொதுமக்கள் எம்டிஆர் கட்டணம் இன்றி, எத்தனை முறை வேண்டுமானாலும், நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டு சேவைகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கானச் செலவுகளை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதன்மூலமாக, புதிதாக பணம் அச்சடிப்பதை தவிர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், தற்போது நெட் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் இந்தச் செயல்பாடுகளுக்கு மாதந்தோறும் கணிசமான கட்டணத்தை, வங்கி நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. எம்டிஆர் என்ற பெயரில், இந்த கட்டணம் மத்திய அரசுக்கு செலுத்தப்படும். இந்நிலையில், தற்போது டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும் போது பொதுமக்கள் எம்டிஆர் கட்டணம் இன்றி, எத்தனை முறை வேண்டுமானாலும், நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டு சேவைகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கானச் செலவுகளை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.