ஆப்நகரம்

18 வயசு ஆகலயா? அப்போ இனி கஷ்டம்.. மத்திய அரசு அதிரடி!

சிம் கார்டு வாங்கும் விஷயத்தில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

Samayam Tamil 3 Mar 2022, 2:06 pm
மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு மிக முக்கியமான அப்டேட் வந்துள்ளது. சிம் கார்டுகள் தொடர்பான விதிமுறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய விதிமுறையின்படி, சிலருக்கு சிம் கார்டு வாங்குவது எளிதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிம் கார்டே வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil sim card


அப்படி என்ன விதிமுறை அமலுக்கு வந்துள்ளது? வாங்க பார்க்கலாம்...

புதிய விதிமுறைப்படி, 18 வயதுக்குக் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வழங்கக்கூடாது என்று நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவர்கள் பெயரில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல், புத்திக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சிம் கார்டு வழங்கப்படாது.

புதிய விதிமுறையில் மேலும் சில அம்சங்களும் வந்துள்ளன. அதாவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிம் கார்டு வாங்கும்போது ஆன்லைன் வெரிஃபிகேசன் செய்தாலே போதும். இந்த வசதியும் தற்போது வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது டிஜி லாக்கரில் உள்ள ஆதார், லைசன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்தே KYC சரிபார்ப்பை முடிக்கலாம்.

மொபைல் நம்பரில் ஏன் 10 டிஜிட் இருக்கு தெரியுமா?
புதிய விதிமுறையின்படி, ஆதார் வாயிலான இ-கேஒய்சி சரிபார்ப்புக்கு கட்டணமாக ஒரு ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆன்லைன் மூலமாகவே வீட்டில் இருந்தபடியே சிம் கார்டை வாங்கும் வசதியும் இப்போது வந்துள்ளது.

பிரீபெய்டு சிம் கார்டை போஸ்ட் பெய்டு சிம் கார்டாக மாற்றும் வசதியும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஓடிபி மூலமாக இந்த வேலையை முடிக்கலாம். இதுபோல நிறைய வசதிகள் புதிய விதிமுறையில் வந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்