ஆப்நகரம்

UPI பரிவர்த்தனைக்கு எக்ஸ்ட்ரா பணம் கட்டணுமா? அரசு சொல்வது இதுதான்!

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 3 Jan 2021, 12:18 pm
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக, யூபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு வெகுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil UPI


ஈசியாக மொபைலிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். சிறு கடைகள், மளிகை கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யூபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடிகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக யூபிஐ சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
undefined

குறிப்பாக, யூபிஐ சேவைகளை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதுதான் வெகுமக்களை ஈர்த்தது. ஆனால், இந்த மாதம் முதல் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற சில செய்திகள் வெளியாகின.

இது, யூபிஐ சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வணிகர்களுக்கும் வருத்தமளிக்கும் தகவலாக வெளியானது. இந்நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அப்பா படம் மூலம் நடிகையான விஜய் சேதுபதியின் செல்ல மகள்
ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல்கள் போலியானவை எனவும், பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், பொய் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தேசிய பரிவர்த்தனை கழகம் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்