ஆப்நகரம்

பென்சன் விதிமுறைகள் மாற்றம்.. சூப்பர் அறிவிப்பு!

பென்சன் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை அரசு திருத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2021, 4:11 pm

ஹைலைட்ஸ்:

  • பென்சன் பணத்தை எடுக்க புதிய விதிமுறைகள்
  • பென்சன் நிதி ஒழுங்கு ஆணையம் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Pension
தேசிய பென்சன் திட்டம் (NPS) மத்திய அரசால் வழங்கப்படும் பென்சன் பிளான் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரிட்டயர்மெண்ட் திட்டமிடுவது மட்டுமல்லாமல் வரியையும் சேமிக்க முடியும். ஏனெனில், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரி சலுகைகள் கிடைக்கிறது.
ரிட்டயர்மெண்ட் திட்டமாக இருந்தாலும் ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்புதான். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறை ஊழியர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

18 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக தேசிய பென்சன் திட்ட கணக்கில் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி (1பி) கீழ் 50,000 ரூபாய் வரை கூடுதல் வரி சலுகை பெறலாம்.

எல்லாருக்கும் சம்பளம் உயர்வு... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
தேசிய பென்சன் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயனாளி ஓய்வுபெற்ற பின் அல்லது 60 வயதை எட்டியபின் கணக்கு மெச்சூரிட்டியை எட்டும். e-NPS மூலமாகவும் தேசிய பென்சன் திட்டக் கணக்கை தொடங்கலாம்.

தற்போது பென்சன் திட்ட கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகலை அரசு திருத்தியுள்ளது. இதன்படி, கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக பென்சன் பணம் இருந்தால், annuity வாங்காமலேயே மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்