ஆப்நகரம்

இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க? அதானியிடம் விளக்கம் கேட்கும் பங்கு சந்தைகள்!

அதானி இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என வெளியான தகவல் குறித்து அதானி குழுமத்திடம் பங்கு சந்தைகள் விளக்கம் கேட்டுள்ளன.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Mar 2023, 6:02 pm
Adani : அதானி குழுமம் இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என வெளியாகியுள்ள தகவல் குறித்து அதானி குழுமத்திடம் தேசிய பங்குச் சந்தையும் (NSE), மும்பை பங்குச் சந்தையும் (BSE) விளக்கம் கேட்டுள்ளன.
Samayam Tamil adani - nse
adani - nse


இன்று பங்கு வர்த்தகத்தின்போது எல்லா அதானி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், அதானி குழுமம் கடன்களை அடைத்துவிட்டதாக சொன்னாலும், இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என ‘தி கென்’ (The Ken) நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான்.

அதானி குழுமம் தனது பங்குகளை அடமானம் வைத்து பெற்ற 21.5 பில்லியன் டாலர் கடனை அடைத்துவிட்டதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதானி குழுமம் முயற்சித்து வரும் நிலையில், கடன்களை அடைத்துவிட்டதாக தெரிவித்தது.

எனினும், அதானி முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ஏனெனில், கடன்களுக்காக அடமானம் வைக்கப்பட்ட அதானி நிறுவனங்களின் புரமோட்டர் பங்குகளை இன்னும் வங்கிகள் முழுமையாக விடுவிக்கவில்லை.

அதானி குழுமம் கடன்களில் பாதியை மட்டுமே அடைத்துள்ளதாகவும், அதனால் இன்னும் புரமோட்டர் பங்குகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும் கென் அறிக்கை கூறுகிறது. இதுவரை அதானி அடைத்த கடன்களுக்காக அதானி போர்ட்ஸ் பங்குகள் மட்டுமே வங்கிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்னும் அதானி கிரீன் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. வழக்கமாக, கடன்களை அடைத்தபின் பங்குகளை வங்கிகள் உடனடியாக விடுவித்துவிடுவார்கள். ஆனால், அதானி விவகாரத்தில் இன்னும் பங்குகளை வங்கிகள் விடுவிக்காததால், அதானி இன்னும் முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இந்நிலையில், இந்த அறிக்கை குறித்து அதானி குழுமத்திடம் தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் விளக்கம் கேட்டுள்ளன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்