ஆப்நகரம்

18 எம்பி, எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு!

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் 27 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Dec 2019, 7:50 pm
பொருளாதாரக் குற்றங்கள் புரிந்த மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான விவரங்களை வழங்கும்படி டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கீழ்க்காணும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil 18 எம்பி எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு


2014 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீது பொருளாதாரக் குற்றம் புரிந்ததாக 14 வழக்குகளை சிபிஐ பதிவுசெய்துள்ளது. இதில் 9 பேர் முன்னாள் எம்பிக்கள்; 2 பேர் தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். சட்டசபையில் முன்னாள் உறுப்பினர்கள் 5 பேர், இந்நாள் உறுப்பினர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொருளாதார மந்தநிலை: மீளாத் துயரில் இந்தியா!

மத்திய அமலாக்கத் துறை மொத்தம் 82 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் 2002, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 ஆகிய இரண்டு சட்டங்களின் கீழ் இந்த வழக்குகளை அமலாக்கத் துறையினர் பதிவுசெய்துள்ளனர்.

9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி!

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை தரப்பிலிருந்து மூன்று பொருளாதாரக் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு வழக்குகள் முன்னாள் எம்பிக்கள் இருவர் மீதும், ஒரு வழக்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மீதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கஜானா காலி... பள்ளிக்கூட நிதியில் கை வைக்கும் மத்திய அரசு?

வருமான வரித் துறை பதிவுசெய்யும் பொருளாதாரக் குற்றங்களின் பிரிவு வாரியான விவரங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. மேற்கூறிய அனைத்து வழக்குகளும் பல்வேறு நிலைகளில் உள்ளன எனவும், வழக்குப் பதிவு தொடர்பான முழு விவரங்களை வெளியிடத் தடை இருப்பதாகவும் அனுராக் தாகூர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்