ஆப்நகரம்

ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2020, 5:23 pm
2018ஆம் ஆண்டின் சுதந்திரதின உரையின்போது, தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் பாரதிய ஜன சங்க் கட்சியின் துணை நிறுவனரான தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாளையொட்டி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் எனவும், உலகின் மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டம் இதுதான் எனவும் பிரதமர் மோடி கூறினார். இத்திட்டம் மோடி கேர் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செப்டம்பர் 23ஆம் தேதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
Samayam Tamil modi care


திட்டத்தின் பயன்கள்:

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.

* 10.74 கோடி குடும்பங்களுக்கு மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ளவர்கள்.

* உடனடியாக ரொக்கமாக பணம் செலுத்தாமலேயே, ஆவணங்கள் எதுவுமின்றி பயனாளிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.

* மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதிகபட்ச மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

தமிழகம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295 கோடி - மத்திய அரசு!

* நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல், தகுதி படைத்த குடும்பங்களுக்குத் தரமான மருத்துவ சேவையை இந்தத் திட்டம் வழங்குகிறது.

* இந்தத் திட்டத்தின் பலன்கள் வீடு தோறும் சென்றடைவதற்கு வசதியாக நாடு முழுவதும் 1,50,000 சுகாதார மற்றும் உடல்நல மையங்கள் உருவாக்கப்படும்.

* குடும்ப நலம் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், தொற்று நோய் அல்லாத பிற நோய்களுக்கு காப்பீடு வழங்கவும், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படும்.

1,400 பேரை வண்டியை விட்டு இறக்கும் ஓலா! வேலையைத் தின்னும் கொரோனா!

ஒரு கோடிப் பேர் பயன்:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒரு கோடியாவது பயனாளியான மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தபாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். தற்போதைய ஊரடங்கு சூழலில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மற்ற பயனாளிகளுடன் தன்னால் உரையாட முடியவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.


இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைச் செய்யும். இரண்டு ஆண்டு காலத்திற்குள் இத்திட்டம் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துப் பயனாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்