ஆப்நகரம்

கோடிகளில் குளிக்கும் அம்பானி... மாஸ் காட்டும் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 18,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2022, 11:58 am
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனம்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது அக்டோபர் டிசம்பர் காலாண்டு வருவாய் விவரங்களை நேற்று வெளியிட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளது.
Samayam Tamil RIL


2021ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.18,549 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 35.6 சதவீதம் அதிகமாகும். அதேபோல, 2020ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 41.5 சதவீதம் அதிகம். நிறுவனத்தின் மொத்த வருவாயைப் பொறுத்தவரையில், 52.2 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2,09,823 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மாஸ் காட்டும் ஜியோ.. சறுக்கிய வோடஃபோன் - ஐடியா!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடனே இல்லாத நிறுவனமாக மாற்றிக் காட்டுவதே முகேஷ் அம்பானியின் இலக்காக இருந்தது. அதன்படி, கொரோனா காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை கடனே இல்லாத நிறுவனமாக மாற்றிக் காட்டியதாக அம்பானி அறிவித்தார். ஆனால் அதைத் தொடர்ந்த மாதங்களில் கடன் சுமை சற்று அதிகரித்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் கட்டணம் போன்ற காரணங்களால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்தது. இதுபோன்ற சூழலில் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

மறுபுறம் பங்கு விற்பனை வாயிலாக ரிலையன்ஸ் நிறுவனம் நிதி திரட்டி வருகிறது. ஷேல் கேஸ் சொத்துகளை விற்றதன் வாயிலாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்