ஆப்நகரம்

நல்லெண்ணெய் விலை ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

விருதுநகரில் 15 கிலோ நல்லெண்ணெய் விலை ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2022, 11:56 am
விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ரூ.4702க்கு (15 கிலோ) விற்பனை செய்யப்பட்ட நல்லெண்ணெய் ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ.4868 ஆக இருக்கிறது.
Samayam Tamil oil


அதேபோல, குண்டூர் வத்தல் (100 கிலோ) கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.21000 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.21500க்கு வந்துள்ளது. அதோடு, நயம் துவரம் பருப்பு (10 கிலோ) கடந்த வாரம் ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.9100க்கு விற்பனையாகிறது.

பர்மா உருட்டு உளுந்து கடந்த வாரம் ரூ.8300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.500 உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.8800க்கு விற்கப்படுகிறது. அதேபோல, தொலி உளுந்தின் விலையானது கடந்த வாரத்தை விட ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.9100க்கும், நாட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 உயர்த்தப்பட்டு (100 கிலோ) பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரயிலில் இனி அந்த பிரச்சினையே இல்லை.. பயணிகளுக்கு சூப்பரான வசதி!

பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.5650க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.5750க்கு விற்பனையாகிறது. பாசிப்பயறு கடந்த வாரம் ரூ.8600க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.8800க்கு விற்கப்படுகிறது. பருப்பு வகைகள், வத்தல் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் பலகாரங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்