ஆப்நகரம்

ஓலாவின் புதிய முயற்சி.. நான்கு சக்கர வாகன உற்பத்தி.. ஒகே சொன்ன தமிழக அரசு!

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் நான்கு சக்கர வாகனங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2023, 1:44 pm
பெங்களூருடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரங்களில் செல்லும் லித்தியம் அயன் செல்களை உற்பத்தி செய்வதற்காக, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்தன.
Samayam Tamil Ola Electrics


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி யூனிட்டில் உள்நாட்டிலேயே நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செல்களை உற்பத்தி செய்வதற்காக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், செல் உற்பத்தி அலகு, புதன்கிழமை தமிழ்நாடு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 3,111 பேருக்கு வேலை வழங்கவும், அதற்கு ரூ.7,614 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Ola Electric புதிய முதலீட்டைப் பயன்படுத்தி போச்சமப்பள்ளி ஆலையில் இருந்து 1.41 லட்சம் மின்சார நான்கு சக்கர வாகனங்களைத் தயாரிக்கவும் மற்றும் ACC PLI திட்டத்தின் கீழ் நிறுவனத்திற்கு 20GWh திறன் ஒதுக்கப்படும் எனவும் அவ்வொப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓலாவின் போச்சம்பள்ளியில் உள்ள அதன் மிகப்பெரிய யூனிட்டில் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்த புதிய முதலீடின் மூலம் ஓசூர்-கிருஷ்ணகிரி-தர்மபுரி (HKD) பகுதியை மின்சார வாகனங்கள் மற்றும் துணை அலகுகளுக்கான மையமாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்ற மற்றொரு தகவலும் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்