ஆப்நகரம்

ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்ற லாரி விபத்து

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் அருகே பழைய ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 14 Nov 2016, 6:16 pm
கர்நாடகம் : கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் அருகே பழைய ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil old banknotes carrying truck mishaps bundles of note near raichur
ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்ற லாரி விபத்து


கர்நாடக மாநிலம் மைசூரில் ரூபாய் அச்சடிக்கும் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்திற்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் கொண்டு சென்ற லாரி கர்நாடக மாநிலம் சிந்தனுர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலை அருகே உள்ள வயல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரிக்கு பாதுகாப்பாக வந்த ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் யாரும் பணத்தை எடுக்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த பணத்தை வேறு வாகனங்களின் மூலம் அனுப்பும் பணியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்