ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் பிடிஆர் உண்மையாக பேசியது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையாக பேசியது என்ன?

Samayam Tamil 10 May 2022, 12:04 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பி வரும் நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil old pension scheme in tamilnadu what did finance minister ptr palanivel thiagarajan really spoke in assembly
பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் பிடிஆர் உண்மையாக பேசியது என்ன?


​பழைய ஓய்வூதியத் திட்டம்

2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிபிஎஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

​அரசு ஊழியர்கள் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து முந்தைய ஆட்சிக்காலங்களிலும் தமிழ்நாடு அரசிடம் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

​திமுக வாக்குறுதி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது.

​இரு தினங்களாக பரபரப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த இரு தினங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.

​கூட்டணிக் கட்சிகள் அழுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் கூறுவது அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் முதல்வர் தலையிட்டு உறுதிசெய்ய வேண்டும் எனவும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

​நிதியமைச்சர் பிடிஆர் உண்மையாகவே பேசியது என்ன?

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை பற்றி பேசினார். இறுதியாக, பழைய பென்சன் திட்ட விவகாரத்தில் முதல்வரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்துவேன் என நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

​கூட்டணிக் கட்சிகளுக்கு பதில்

மேலும் இவ்விவகாரம் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில், “தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்பவே முடியாது. இது எதிர்க்கட்சிகளுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமமாக பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடுக்கும் முடிவு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்