ஆப்நகரம்

”என்ன விலை அழகே.. சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..” ரோஜா விலை கடும் உயர்வு!

காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 14 Feb 2023, 2:23 pm
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசுகளை கொடுப்பது வழக்கம். குறிப்பாக ரோஜா எப்போதுமே காதலர்களின் முக்கியத் தேர்வாக உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். இந்த சமயத்தில் ரோஜா பூக்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கிச் செல்ல காதலர்களின் கூட்டம் அலை மோதும்.
Samayam Tamil rose


இந்த ஆண்டு காதலர் தினத்திலும் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பூ மார்க்கெட்களில் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் இன்று ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளது. இதற்காக பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் ரோஜாப் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் வழக்கமாக சந்தைக்கு வரும் பூக்களின் அளவைவிட இன்று குறைந்த அளவு பூக்களே வந்துள்ளன. பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

20 பூக்கள் அடங்கிய ஒரு கட்டுக்கு சாதாரணமாக 250 ரூபாய் விலை காணப்படும் நிலையில், இன்று அதன் விலை 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு பூவின் விலை 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளை, பிங்க், மஞ்சள், சிவப்பு, ராக்ஸ்டார் என பலவகை பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தோவாளை மலர் சந்தை மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கியமான பூ மார்க்கெட்களில் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை ஒரு கட்டு 150 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் திருப்பத்தூருக்கு தினமும் மினி லாரிகளில் வரும் நிலையில், காதலர்கள் தினம் என்பதால் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரயில் டிக்கெட் ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. இனி யார் வேண்டுமானாலும் போகலாம்!
மற்ற நாட்களில் ரோஜா கட்டு 150 ரூபாய் வரை இருக்கும். ஆனால் தற்போது ஒரு கட்டு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா பூ கட்டு வாங்கி விற்பவர்கள் ரூ. 50 முதல் ரூ. 100 வரை சேர்த்து விற்பனை செய்வதாகவும் கூறுகின்றனர். அடுத்து வரும் நாட்களில் ரோஜா விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு கிலோ ரோஜா பூ விலை 300 ரூபாயாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்