ஆப்நகரம்

உணவு டெலிவரி சேவை எப்படி இருக்கு?

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தற்போது இந்தியாவில் உணவு டெலிவரி சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஜொமாடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 3:42 pm
இந்தியாவின் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாடோ கொரோனா ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தது. இதனால் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தும், சில ஊழியர்களைப் பணியை விட்டு நீக்கியும் கடினமான முடிவுகளை மேற்கொண்டிருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் சில நாட்கள் உணவு டெலிவரி சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை மற்றும் உணவு விநியோகத்தைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Samayam Tamil zomato


அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் மக்களிடையே கொரோனா அச்சம் அதிகமாக இருந்ததால் வீட்டில் சமைத்து உண்ணுவதையே முக்கியமாகக் கொண்டனர். அதோடு, டெலிவரி செய்பவர்கள் வாயிலாகக் கொரோனா பரவும் என்ற அச்சமும் இருந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு - மூன்று மாதங்களுக்கு உணவு டெலிவரி சேவை மந்தமாகவே இருந்தது. டெலிவரி பணியாளர்களுக்கான தட்டுப்பாடும் நிலவியது. இந்நிலையில், உணவு டெலிவரி சேவையில் கொரோனாவுக்கு முந்தைய அளவில் 85 சதவீதத்தை அடைந்துவிட்டதாக ஜொமாடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் சம்பாதிக்கலாம்!

இதுகுறித்து ஜொமாடோ பதிவிட்டுள்ள பிளாக் ஸ்பாட் பதிவில், ஆகஸ்ட் மாத அளவை விட இப்போது 75 சதவீதம் சேவை அதிகரித்துள்ளதாகவும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் டெலிவரி சேவை சிறப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை சீசன் வரவிருக்கும் நிலையில் உணவு ஆர்டர்கள் அதிகரிக்கும் என்று ஜொமாடோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் உணவகங்கள் அதிகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளதால் ஆன்லைன் உணவு ஆர்டர்களும் அதிகரித்து வருகின்றன.

SBI Kisan Credit Card: எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாடோ, குருகிராம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் 24 நாடுகளிலும், 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் உணவுகளை டெலிவரி செய்துவருகிறது. சமைக்கப்பட்ட உணவு மட்டுமல்லாமல், கொரோனா காலத்தில் காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் டெலிவரி செய்யத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமாக, ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜொமாடோ நிறுவனம் தனது தொழிலை நாட்டின் மூலை முடுக்கெங்கும் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்