ஆப்நகரம்

வருமான வரி செலுத்தியாச்சா? மொத்தமே இத்தனை பேர்தான்!

நேற்று வரை 5.89 கோடிப் பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர்.

Samayam Tamil 1 Jan 2022, 4:23 pm
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நிறையப் பேர் வருமான வரியைத் தாக்கல் செய்யவில்லை. கால அவகாசம் நெருங்கும் சமயத்தில் கடைசி ஒரு வாரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் 46.11 லட்சம் பேர் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil itr filing


வருமான வரித் துறை சார்பாக வெளியிடப்பட்டு தகவலின்படி, நேற்று வரை மொத்தம் 5.89 கோடிப் பேர் மட்டுமே 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக 2021 ஜனவரி 10ஆம் தேதி வரை முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்காக வழங்கப்பட்ட அவகாசத்தில் மொத்தம் 5.95 கோடிப் பேர் மட்டுமே வரித் தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான ஜனவரி 10ஆம் தேதியில் மட்டும் மொத்தம் 31.05 லட்சம் பேர் தாக்கல் செய்திருந்தனர். இந்த முறை இன்னும் அதிகப் பேர் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

வருமான வரி: 27 லட்சம் பேர் எஸ்கேப்... அபராதம் செலுத்த ரெடியா?
டிசம்பர் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரியில் (5.89 கோடி) 49.6 சதவீதம் ITR1 ஆகும். மேலும், ITR2 9.3 சதவீதமாகவும், ITR3 12.1 சதவீதமாகவும், ITR4 27.2 சதவீதமாகவும், ITR5 1.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் நிறையப் பேர் இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளனர். அவர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் 5000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடலாம். வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட வெப்சைட்டில் பிரச்சினைகள் இருப்பதாக சிலர் புகாரளித்தனர். இதனால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்