ஆப்நகரம்

இந்த அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க... ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்!

ஜன் தன் யோஜானா வங்கிக் கணக்கின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

Samayam Tamil 16 Sep 2021, 4:24 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் நரேந்திர மோடி அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil jan dhan


இந்த ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கில் நிறைய நன்மைகள் உள்ளன. இதில் விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கிறது. அதேபோல, கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் இல்லாமலேயே பணம் எடுக்க முடியும். ஆயுள் காப்பீடாக ரூ.30,000 வழங்கப்படுகிறது. டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி கிடைக்கிறது. இலவச மொபைல் பேங்கிங் வசதியும் உள்ளது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

ஆதார் கார்ட்லாம் ப்ரூஃப் கிடையாது.. உயர் நீதிமன்றம் தடாலடி!
ஜன் தன் கணக்கு மூலமாக காப்பீடு, பென்சன் போன்ற நிதியுதவிகளைப் பெறுவது எளிதாக உள்ளது. எந்தவொரு வங்கியிலும், தபால் நிலையத்திலும் ஜன் தன் கணக்கை நீங்கள் திறக்க முடியும். பெயர், மொபைல் நம்பர், வங்கிக் கிளையின் பெயர், பயனாளர் முகவரி, நாமினி பெயர், தொழில், ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும். ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலை அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்