ஆப்நகரம்

இந்த அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனா நிறைய நன்மை! உடனே பண்ணுங்க!

ஜன் தன் வங்கிக் கணக்கின் நன்மைகள் மற்றும் கணக்கு தொடங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 16 Jun 2021, 2:05 pm
நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil jan dhan


ஜன் தன் திட்டத்தில் வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் வங்கிக் கணக்கு தொடங்கலாம். ஆனால் சேமிப்புக் கணக்கில் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே வைத்திருக்க இயலும். எந்த வங்கியில் கணக்கு திறக்க விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிலேயே ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், ஆன்லைன் பரிவர்த்தனை வசதி போன்றவற்றை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான நகல்களையும் இணைக்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை அடையாளச் சான்றாகவும், குடும்ப அட்டை, கேஸ் பில், மின் கட்டண ரசீது, தொலைபேசி பில் இவற்றில் ஒன்றை இருப்பிடச் சான்றாகவும் கொடுக்கலாம்.அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்திக் கையெழுத்திட வேண்டும்.
35,000 ரூபாய்க்கு பைக் வாங்கலாம்... இது சூப்பர் சான்ஸ்!
ஜன் தன் கணக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களது வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப்ட் முறையில் பணம் எடுக்க முடியும். உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும். பொதுவாக ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை மெயிண்டைன் செய்ய வேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும். அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்