ஆப்நகரம்

மாணவர்கள் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு.. இதெல்லாம் செய்யலாம்!

மாணவர்கள் படித்துக்கொண்டே வேறு இடங்களில் பணம் சம்பாதிக்க சில வழிகள் உள்ளன. முழு விவரம் இதோ..

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 Jan 2023, 3:52 pm
2023ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், புத்தாண்டில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை நிறையப் பேரிடம் இருக்கும். குறிப்பாக மாணவர்கள் அதில் தீவிரமாக இருப்பார்கள். புத்தாண்டில் மாணவர்கள் பலர் தங்கள் சொந்த செலவுக்கான பணத்தை தாங்களே சம்பாதிக்க விரும்புவார்கள். அதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.
Samayam Tamil money


பார்ட் டைம் ஜாப்!

மாணவர்கள் பகுதி நேர வேலை செய்யலாம். கல்லூரி மாணவராக இருந்தால் கல்லூரி வளாகத்திலேயே நூலகம் உள்ளிட்ட இடங்களில் பகுதி நேர வேலை கிடைக்கும். இது தவிர, வளாகத்திற்கு வெளியே பகுதி நேர வேலைகளையும் தேடலாம். உணவகங்கள் அல்லது பெரிய காபி கடைகளில் வேலை செய்யலாம்.

ஃப்ரீலான்சிங்!

இன்றைய காலத்தில் ஃப்ரீலான்சிங் என்பது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஃப்ரீலான்சிங் வேலை எழுத்து, கிராஃபிக் டிசைனிங் அல்லது புரோகிராமிங் போன்றவற்றில் செய்யப்படலாம். இப்போது பல இணையதளங்கள் இதையே மையமாக வைத்து இயங்கி வருகின்றன. அதில் மாணவர்களுக்கு நல்ல வேலையும் சம்பளமும் கிடைக்கலாம்.

ஆன்லைனில் விற்பனை!

உங்களிடம் தேவையில்லாத பொருட்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் விற்கலாம். ஆன்லைனில் பொருட்களை விற்கக்கூடிய பல இணையதளங்கள் உள்ளன. இதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது. சமீப காலமாக ஆன்லைனில் பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் விற்பனை செய்து சம்பாதிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இதுபோன்ற விற்பனை முழுவதும் அங்கீகரிக்கடவில்லை என்றாலும் பழைய பொருட்களை விற்பனை செய்து சம்பாதிக்க சில வெப்சைட்கள் உள்ளன.

கற்பித்தல்!


ஏதாவது ஒரு பாடத்தில் நன்கு தேர்ந்தவராக இருந்தால், டியூசன் செண்டர் ஆரம்பிக்கலாம். அல்லது ஹோம் டியூசன் மூலம் வீட்டிலேயே கல்வி கற்றுத்தருவதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். ஆன்லைனிலும் டியூசன் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. படித்துக்கொண்டே டியூசன் நடத்துவது என்பது எளிதான ஒன்றாகவே இருக்கும்.


இதுபோன்ற நிறைய வாய்ப்புகள் மாணவர்களுக்கு உள்ளன. இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தால் மாணவர்கள் தங்களது சொந்த செலவுகளைப் பார்த்துக் கொள்ள முடியும். அதேபோல, படிப்புச் செலவுகளுக்கும் அது பயன்படும். பெற்றோரையே முழுவதும் சார்ந்து இருக்காமல் தங்களது படிப்புச் செலவுகளை சமாளிக்கலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்