ஆப்நகரம்

கடன் ஏய்ப்பாளர்கள்: ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்

கடன் ஏய்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

TOI Contributor 4 May 2017, 9:48 pm
டெல்லி: கடன் ஏய்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil ordinance empowers reserve bank of india to act against top loan defaulters
கடன் ஏய்ப்பாளர்கள்: ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்


தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அவசரச் சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் எனவும், குடியரசு தலைவர் அனுமதி கிடைத்த பிறகு இந்த அவசரச் சட்டம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை கடந்த சில மாதங்களாக நடத்திய தொடர் ஆலோசனைக்குப் பிறகு இந்த அவசரச் சட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் இந்த அவசரச் சட்டம் மூலம், கடன் செலுத்தும் தகுதி இருந்தும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.6.07 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு ரூ.5.02 லட்சம் கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ordinance empowers Reserve Bank of India to act against top loan defaulters

அடுத்த செய்தி

டிரெண்டிங்