ஆப்நகரம்

ஏடிஎம்ல பணம் எடுக்க போறீங்களா? இது தெரியலனா பிரச்சினைதான்!

ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிமுறை வந்துள்ளது. இனி பணம் பாதுகாப்பாக இருக்கும்...

Samayam Tamil 15 Mar 2022, 3:10 pm
வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஏடிஎம் மெஷின்களில் பணம் திருடப்படுவது, ஏடிஎம் PIN நம்பரைத் திருடி பணத்தைக் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தவும், ஏடிஎம் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காகவும் ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
Samayam Tamil atm


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுக்கும்போது ஓடிபி நம்பரைப் பதிவிட வேண்டும். இந்த நம்பர் இல்லாமல் நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டியிருக்கும். இந்த விதிமுறை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஓடிபி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம், பணம்: கொஞ்சம் மிஸ் ஆனா எல்லாம் அபேஸ்!
அதாவது, ரூ.10,000 அல்லது அதற்கு மேலான தொகையை எடுக்கும்போது மட்டுமே ஓடிபி அனுப்பப்படும். அதைவிடக் குறைவாக எடுத்தால் ஓடிபி கிடையாது. வழக்கமான முறையிலேயே எடுக்கலாம். வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு இந்த ஓடிபி அனுப்பப்படும். எனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை ஆக்டிவாக வைத்திருப்பது அவசியம்.

வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்