பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயனாளிகளுக்கு 9ஆவது தவணைப் பணத்தை மத்திய அரசு இன்று விடுவிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காணொளிக் காட்சி வாயிலாக 9.75 கோடி விவசாயிகளுக்கு இந்த நிதியைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இன்று மட்டும் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதியின் மதிப்பு ரூ.1.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிதியை விடுவித்த பிறகு பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டது இத்திட்டத்தின் 9ஆவது தவணைப் பணமாகும். பயனாளிகள் சிலருக்கு பணம் வந்துசேரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கலாம். அவர்களுக்கு பெயர், மொபைல் நம்பர், ஆதார், வங்கிக் கணக்கு விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் பணம் வந்து சேராது. எனவே பிஎம் கிசான் வலைதளத்தில் பயனாளிகள் தங்களது விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.
நகை வாங்க நல்ல நாள்... மிகப் பெரிய விலைச் சரிவு!
இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தற்போதைய 9ஆவது தவணைக்கு முன்பாக, விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.1.37 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பிஎம் கிசான் திட்டத்தில் உள்ள சுமார் 2.28 கோடி விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் கீழ் அவர்கள் கடனும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக ரூ.2.32 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை விடுவித்த பிறகு பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டது இத்திட்டத்தின் 9ஆவது தவணைப் பணமாகும். பயனாளிகள் சிலருக்கு பணம் வந்துசேரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கலாம். அவர்களுக்கு பெயர், மொபைல் நம்பர், ஆதார், வங்கிக் கணக்கு விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் பணம் வந்து சேராது. எனவே பிஎம் கிசான் வலைதளத்தில் பயனாளிகள் தங்களது விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.
நகை வாங்க நல்ல நாள்... மிகப் பெரிய விலைச் சரிவு!
இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தற்போதைய 9ஆவது தவணைக்கு முன்பாக, விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.1.37 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பிஎம் கிசான் திட்டத்தில் உள்ள சுமார் 2.28 கோடி விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் கீழ் அவர்கள் கடனும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக ரூ.2.32 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.