ஆப்நகரம்

மொபைல் நெட்வொர்க் சரியில்லை: 26,400 புகார்கள் பதிவு!

இந்த ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மொபைல் நெட்வொர்க் சேவை தொடர்பாக 26,400 புகார்களை வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2019, 6:52 pm
மொபைல் நெட்வொர்க் சேவை தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தகவல் தொடர்புத் துறை இணையமைச்சரான சஞ்சய் தோத்ரே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், அழைப்பு துண்டிப்பு, டேட்டா வேகம் குறைவு உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகள் தொடர்பாக இந்த ஆண்டின் ஜனவரி - நவம்பர் காலகட்டத்தில் 24,000க்கு மேற்பட்ட புகார்களை வாடிக்கையாளர்கள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதே காரணங்களுக்காக அரசிடம் 44,800 புகார்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Samayam Tamil மொபைல் நெட்வொர்க் சரியில்லை_ 26400 புகார்கள் பதிவு


இதுகுறித்து அவர் அளித்துள்ள பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘டிராய் சட்டம் 1997இன்படி, வாடிக்கையாளர்கள் வழங்கும் புகார்கள் டிராய் அமைப்பால் நேரடியாகக் கையாளப்படுவதில்லை. அப்புகார்கள் சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அதற்குத் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்கும். மொபைல் நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்த 2015 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரையில் புதிதாக 1.6 லட்சம் மொபைல் டவர்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.’

இந்தியப் பொருளாதாரம் வளரவே வளராது: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு!

டவர்கள் அமைக்கும் பணியை எளிதாக்கும் விதமாக அரசு தரப்பிலிருந்து ஒப்புதல்கள் விரைவாக வழங்கப்படுவதாகவும், ஸ்பெக்ட்ரம் விரிவாக்கம், உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட உதவிகளைத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு வழங்கி வருவதாகவும் சஞ்சய் தோத்ரே கூறினார். 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன் உற்பத்தியில் மண்ணைக் கவ்விய தமிழ்நாடு!

மொபைல் சேவைக்கான டவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 4.15 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019 நவம்பர் மாதத்தில் 5.82 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அழைப்பு துண்டிப்பு பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்