ஆப்நகரம்

ஜன் தன் திட்டத்தில் 40 கோடிக் கணக்குகள்!

பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் இதுவரையில் 40 கோடி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Aug 2020, 11:03 pm
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உருவாக்கி மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜன் தன் யோஜனா தொடங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்த ஜன் தன் யோஜனா (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) திட்டத்தை அறிவித்தார். நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்தத் திட்டம், துவங்கப்பட்ட அன்றே 1.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.
Samayam Tamil jan dhan


இந்நிலையில், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியோரின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வங்கிக் கணக்குகளில் 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜன் தன் திட்டத்தின் மூலம் இதுவரையில் 40.05 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 1.30 லட்சம் கோடிக்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது’என்று கூறப்பட்டுள்ளது.

ஜன் தன்: வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி?

மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சிறப்புச் சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றின் சலுகை ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. இது கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியால் வாடும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் 500 ரூபாயாக மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயன்களால் ஜன் தன் கணக்குகளின் பயன்பாடும் ஜன் தன் கணக்குகளைத் திறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்