ஆப்நகரம்

தமிழ்நாட்டில் விவசாயத்தை வளர்க்க ரூ.5000 கோடி!

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.5990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 2:52 pm
வேளாண் உட்கட்டமைப்பு நிதி தொடர்பான கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், ”வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க முடியும்” என்றார்.
Samayam Tamil agri fund


மேலும் பேசிய அவர், ”இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறலாம். இத்திட்டத்தில் தனி நபரோ அல்லது நிறுவனமோ அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மூன்று சதவீதம் வட்டிக் குறைப்புடன் கடன் பெறலாம்” எனக் கூறினார்.

வெங்காய விவசாயத்தில் கொள்ளை லாபம்.. விவசாயிகள் மகிழ்ச்சி!
இக்கருத்தரங்கத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமயமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்