ஆப்நகரம்

மகளிர் தினம்: ஜன் தன் கணக்கில் பெண்கள் ஆதிக்கம்!

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பெண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Mar 2021, 9:29 pm
நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil jan dhan


இந்த ஜன் தன் யோனஜா கணக்குகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றில் ஜன் தன் கணக்குகளின் கீழ் பெண்கள் அதிகப் பயன் பெறுகின்றனர். இந்நிலையில் ஜன் தன் யோஜனா திட்டத்தில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் பெண்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுது!

2021 பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் ஜன் தன் திட்டத்தின் கீழ் மொத்தம் 41.93 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 23.21 கோடி கணக்குகள் பெண்களால் திறக்கப்பட்டவை. பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முத்ரா கடன் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 19.04 கோடிப் பெண்களுக்கு ரூ.6.36 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க இத்திட்டத்தின் கீழ் அதிகளவு கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்