ஆப்நகரம்

100 நாள் வேலைத் திட்டம்: 86 லட்சம் பேருக்கு வேலை அட்டை!

நடப்பு நிதியாண்டில் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை அட்டைகள் 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2020, 4:41 pm
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத்திறன் இல்லாத உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் இதுவரையில் 86,81,928 புதிய வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil job card


2019-20ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 36,64,368 வேலை அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டில் மொத்தம் 2,74,719 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இங்கு வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை 1,59,143 ஆக இருந்தது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 21,45,346 அட்டைகள் வழங்கப்பாட்டுள்ளன. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 5 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலை தேடுவோருக்கு சூப்பர் சான்ஸ் - மிஸ் பண்ணிடாதிங்க!

வேலை உருவாக்கத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மொத்தம் 20,202.92 லட்சம் பணியாளர் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் உருவாக்கப்பட்ட பணியாளர் வேலை நாட்களின் எண்ணிக்கை 1,418.51 லட்சம் ஆகும். 100 நாள் வேலைத்திட்டத்துக்கான சம்பளம் கொடுப்பதற்காக இந்த ஆண்டில் மொத்தம் ரூ.40,18,282.32 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆன செலவு ரூ.2,60,040.03 லட்சம் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்