ஆப்நகரம்

பான் கணக்கு உடன் ஆதார் எண் இணைத்தால் கருப்புப் பணம், வரி ஏய்ப்பை சமாளிக்கலாம்: மத்திய அரசு தகவல்

பான் எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு உடன், ஆதார் எண்ணை இணைப்பதால், கருப்புப் பணப்புழக்கம், வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 26 Apr 2017, 10:29 pm
பான் எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு உடன், ஆதார் எண்ணை இணைப்பதால், கருப்புப் பணப்புழக்கம், வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil pan aadhaar linking is to check tax evasion and black money govt to sc
பான் கணக்கு உடன் ஆதார் எண் இணைத்தால் கருப்புப் பணம், வரி ஏய்ப்பை சமாளிக்கலாம்: மத்திய அரசு தகவல்


ஆதார் எண்ணை மத்திய அரசின் அனைத்துவித சேவைகள், நலத்திட்டங்களுக்குக் கட்டாயமாக்கியது ஏன் எனக் கேட்டு, உச்சநீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரிடம், ஆதார் எண் கட்டாயமாகக் கேட்கப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசின் விளக்கம் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதன்படி, இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக, தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நேரில் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். அப்போது, கருப்புப் பணப்புழக்கம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை சமாளிக்கும் வகையில், ஆதார் எண்ணை, பான் கணக்குடன் இணைக்க விரும்பியே, இந்த பணியை மேற்கொண்டதாக, அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் மட்டும் 10 லட்சம் போலியான பான் அட்டைகளை கண்டுபிடித்துள்ளதாக, முகுல் ரோஹத்கி தெரிவித்தார். பான் என்பது மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. இதில், போலிகள் இருப்பதை தடை செய்வதால், கருப்புப் பணப்பரிவர்த்தனை, வரி ஏய்ப்புகள் எளிதாக தடுக்கப்படுவதாகவும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த திட்டத்தையும் அதன் பயன்பாடு மற்றும் கிடைக்கும் பலன் அடிப்படையிலேயே நல்லதா, கெட்டதா எனக் கூற முடியும் என்றும், எடுத்த எடுப்பிலேயே தவறு என விமர்சிக்க முடியாது என்றும், முகுல் ரோஹத்கி சுட்டிக்காட்டி உள்ளார்.

Justifying amendment in the Income Tax law for linking Permanent Account Number (PAN) to Aadhaar, the Centre told the Supreme Court on Wednesday that it was done to curb tax evasion and keep tabs on circulation of black money as PAN was not foolproof.

அடுத்த செய்தி

டிரெண்டிங்