ஆப்நகரம்

இனி பான் கார்டு வாங்குறது ரொம்ப ஈசி.. ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

ரயில் நிலையங்களிலேயே பான் கார்டு வாங்கும் வசதி வந்துள்ளது.

Samayam Tamil 11 Mar 2022, 12:27 pm
இந்தியாவில் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை தனி மனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களாகும். குறிப்பாக, பான் கார்டுகள் வருமான வரி உள்ளிட்ட பணம் சார்ந்த விஷயங்களுக்கு கட்டாயமாக உள்ளது. வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றைத் தடுக்க பான் கார்டுகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல, வங்கிகளில் கடன் பெறுவது போன்ற விஷயங்களுக்கும் பான் கார்டுகள் அவசியம்.
Samayam Tamil pan card


ஆதார் கார்டைப் பொறுத்தவரையில், இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதற்கான முக்கியமான ஆவணமே ஆதார்தான். ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பெறுவதற்கு பொதுச் சேவை மையத்தை நாம் அணுக வேண்டும். அங்கு குறிப்பிட்ட கட்டணத்தில் இவற்றை நாம் பதிவுசெய்து வாங்கலாம். ஆனால் இப்போது ஆதார் கார்டையும் பான் கார்டையும் வாங்குவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு உதவுவதற்காகவே இந்த வசதி வந்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சூப்பர் வசதி அறிமுகம்!
அதாவது, ரயில் நிலையங்களிலேயே இனி ஆதார் கார்டு, பான் கார்டை நாம் வாங்கிக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், வருமான வரி தாக்கல், விமான டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இனி ரயில் பயணிகள் பெறலாம். இதற்காக சிறப்பு மையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். ’ரயில்வயர் சாத்தி கிசோக்ஸ்’ என்ற பெயரில் இந்த மையங்கள் செயல்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக ரயில்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையம் வரும் பயணிகள் அங்கேயே ஆதார், பான் கார்டு, வருமான வரி தொடர்பான சேவைகளைப் பெறுவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்