ஆப்நகரம்

பணி நிரந்தரம் வேண்டும்.. பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள்!

அமைச்சரவை கூட்டத்தில் பணி நிரந்தரம் குறித்து அறிவிக்க பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 Mar 2023, 7:49 am
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிக நிலையில் 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து, 12ஆவது ஆண்டில் பணி புரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருகிறார்கள்.
Samayam Tamil part time teachers


10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற குடும்பங்களின் எதிர்காலம் மேம்பட, மனிதாபிமானத்துடன் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு கொள்கை முடிவெடுத்து, பகுதி நேர ஆசிரியர்களின் பணி அனுபவத்தை வரைமுறையாக கொண்டு, சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ““கடந்த 11 ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணி புரியும் சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்களில் பலர் 50 வயதை கடந்து விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகள்தான் அவர்களால் பணி புரிய முடியும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல் தாமதம் செய்வது வேதனை அளிக்கிறது.

திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் குறிப்பிட்டவாறு எங்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். 12 ஆயிரம் பேருக்கு காலமுறை சம்பளம் கொடுத்து பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பெரிய செலவு ஆகாது. இன்னும் 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கினாலே போதுமானது. முதல்வர் மனசு வைத்தால் அது நடக்கும். விரைவில் இது தொடர்பான முடிவை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்