ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம் (Paytm) தீபாவளிக்கு முன்பாகவே ஐபிஓ அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. சுமார் 16,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓவை அறிமுகப்படுத்த பேடிஎம் திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பை 1.47 லட்சம் கோடி முதல் 1.78 லட்சம் கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஐபிஓவிற்கு முந்தைய சுற்றுகளை தவிர்க்க பேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஓவுக்கு தேவையான கூடுதல் நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக பங்குச் சந்தையில் பட்டியலிட பேடிஎம் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளலாமே தவிர கட்டாயமில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை. ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகள் தாமதத்தையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகளை தவிர்க்க பேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஐபிஓ மதிப்பில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறுகின்றனர். பேடிஎம் ஐபிஓவிற்கு விரைவில் செபி அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளலாமே தவிர கட்டாயமில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை. ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகள் தாமதத்தையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, ஐபிஓவுக்கு முந்தைய நடவடிக்கைகளை தவிர்க்க பேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஐபிஓ மதிப்பில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என நம்பத்தகுந்த வட்டாரத்தில் கூறுகின்றனர். பேடிஎம் ஐபிஓவிற்கு விரைவில் செபி அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.