இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான பேடிஎம்மிற்கு (Paytm) ஏராளமான பயனர்கள் உள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனை, டிஜிட்டல் வாலட், பில் கட்டணம், ட்ரேடிங், ஷாப்பிங் என பல்வேறு சேவைகளை பேடிஎம் செயலி வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று பேடிஎம் ஆப் செயல்படவில்லை என ஏராளமான பயனர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார் அளித்தனர். பல முறை முயற்சி செய்தும் பேடிஎம் ஆப் வழியாக பணம் அனுப்ப முடியவில்லை என சிலர் புகார் தெரிவித்தனர்.
மறுபக்கம், பங்குச் சந்தையில் ட்ரேடிங் செய்துகொண்டிருந்தபோது பேடிஎம் ஆப் செயல்படவில்லை எனவும், அதனால் பணம் நஷ்டமாகிவிட்டதாகவும், பேடிஎம் இழப்பீடு தர வேண்டும் எனவும் சிலர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பேடிஎம் அளித்த விளக்கத்தில், “பேடிஎம்மில் நெட்வொர்க் பிரச்சினையால் சிலருக்கு பேடிஎம் ஆப் மற்றும் இணையதளத்தில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். இதை சரிசெய்வதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்” என்று தெரிவித்தது.
பின்னர், பயனர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பிரச்சினை சரிசெய்யப்பட்டு இப்போது சீராகிவிட்டதாகவும் பேடிஎம் தெரிவித்தது. மேலும், ட்ரேடிங்கில் பிரச்சினையை சந்தித்தவர்கள் விவரங்களுடன் இமெயில் அனுப்பும்படி பேடிஎம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று பேடிஎம் ஆப் செயல்படவில்லை என ஏராளமான பயனர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார் அளித்தனர். பல முறை முயற்சி செய்தும் பேடிஎம் ஆப் வழியாக பணம் அனுப்ப முடியவில்லை என சிலர் புகார் தெரிவித்தனர்.
மறுபக்கம், பங்குச் சந்தையில் ட்ரேடிங் செய்துகொண்டிருந்தபோது பேடிஎம் ஆப் செயல்படவில்லை எனவும், அதனால் பணம் நஷ்டமாகிவிட்டதாகவும், பேடிஎம் இழப்பீடு தர வேண்டும் எனவும் சிலர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பேடிஎம் அளித்த விளக்கத்தில், “பேடிஎம்மில் நெட்வொர்க் பிரச்சினையால் சிலருக்கு பேடிஎம் ஆப் மற்றும் இணையதளத்தில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். இதை சரிசெய்வதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்” என்று தெரிவித்தது.
பின்னர், பயனர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பிரச்சினை சரிசெய்யப்பட்டு இப்போது சீராகிவிட்டதாகவும் பேடிஎம் தெரிவித்தது. மேலும், ட்ரேடிங்கில் பிரச்சினையை சந்தித்தவர்கள் விவரங்களுடன் இமெயில் அனுப்பும்படி பேடிஎம் தெரிவித்துள்ளது.