ஆப்நகரம்

கொரோனாவால் களைக்கட்டிய கம்ப்யூட்டர் விற்பனை!

Work from home காரணமாக சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 11 Jul 2020, 9:26 pm
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்கு ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தின. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டதால் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் சூழல் ஏற்பட்டது. இது நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பயனளித்தது. ஐடி, மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதித்தன.
Samayam Tamil pc sales


இதனால் கம்ப்யூட்டர், லேப்டாப், இணைய இணைப்பு போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளன. குறிப்பாக மொபைல் யுகமாக மாறிவிட்ட இக்காலத்தில் தனிநபர் பயன்பாட்டுக் கணினிகளுக்கான பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. கார்ட்னர் மற்றும் இண்டர்நேஷனல் டேட்டா கார்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச அளவில் கணினி விற்பனை 11.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் சர்வதேச அளவில் மொத்தம் 7.23 கோடி கணினிகள் விற்பனையாகியுள்ளன.

கார் வாங்கினால் ரூ.80,000 வரை தள்ளுபடி!

பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 1.81 கோடி கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து ஹெச்பி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதன் சந்தைப் பங்கு 24.8 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து லெனோவோ நிறுவனம் 1.74 கோடி கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது. டெல் நிறுவனம் 1.2 கோடி கம்ப்யூட்டர்களையும், ஆப்பிள் நிறுவனம் 53லட்சம் கம்ப்யூட்டர்களையும், ஏசர் நிறுவனம் 49 லட்சம் கம்ப்யூட்டர்களையும் விற்பனை செய்துள்ளன.

கொரோனாவால் இந்தியாவுக்கு பெரிய தலைவலி: ஆர்பிஐ!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் Work from home, ஆன்லைன் கிளாஸ், வீட்டிலேயே பொழுதுபோக்கு என்ற பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கம்ப்யூட்டர், லேப்டாப், வொர்க்ஸ்டேஷன் போன்றவற்றுக்கான தேவையும் விற்பனையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்