ஆப்நகரம்

இரு மடங்கு உயரும் பென்சன்.. விரைவில் ஹேப்பி நியூஸ்?

அரசு முக்கிய முடிவு!!

Samayam Tamil 26 May 2022, 2:30 pm
ஊழியர்களுக்கான பென்சன் தொகை விரைவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
Samayam Tamil pension and salary limit going to increase soon epfo employees are waiting
இரு மடங்கு உயரும் பென்சன்.. விரைவில் ஹேப்பி நியூஸ்?


பென்சன்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்சன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

வலுக்கும் கோரிக்கை!

குறைந்தபட்சம் 1000 ரூபாய் பென்சன் என்பது போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் பிஎஃப் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பிஎஃப் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர்.

விரைவில் ஹேப்பி நியூஸ்!

குறைந்தபட்ச பென்சன் மட்டுமல்லாமல், அடிப்படை சம்பளம் தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பு உள்ளது.

அடிப்படை சம்பளம்!

ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் என்ற அடிப்படையில்தான் பென்சன் தொகை கணக்கிடப்படுகிறது. இந்த வரம்பை உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு தீர்ப்பு கிடைத்தால் பென்சன் பணம் ரூ.8500 ரூபாய்க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21,000 ரூபாய்!

ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்சன் தொகை 15000 ரூபாயிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் ஒருவேளை 21,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும். எனவே விரைவில் சம்பள வரம்பு 21,000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்