ஆப்நகரம்

ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி... இனி அலையத் தேவையில்லை!

ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Jul 2020, 5:49 pm
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாத இறுதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கொரோனா அச்சத்தால் பலர் வேலைக்குக் கூட போகாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். முதியவர்களுக்கு கொரோனா பரவல் அச்சம் அதிகமாக இருப்பதால் அவர்கள் வெளியே செல்ல இயலாத சூழல் இருக்கிறது. இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அவர்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வீடுகளுக்கே சென்று ஓய்வூதியத்தை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எட்டு திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு பொதுச் சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வழியாகவே செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வசதி பரவலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் அலுவலகங்களுக்குச் செல்லாமல் தங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் தங்களது ஓய்வூதியம் தொடர்பான வேலைகளை முடித்துக்கொள்ளலாம்.

வழி மேல் விழி வைத்து... காத்துக் கிடக்கும் நிறுவனங்கள்!

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த கைவிடப்பட்ட 65 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 14 லட்சம் பயனாளிகள் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 13,79,946 பயனாளிகள் ஓய்வூதியத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பெற்று வருகின்றனர். மேலும், 14,409 பேர் மணியார்டர் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

கொரோனாவிலிருந்து தப்பித்த கார் நிறுவனங்கள்!

பொதுவாக இந்த சமூகநலத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் படிவத்திலோ அல்லது வெள்ளைத் தாளிலோ தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அல்லது சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். தற்போது கொரோனா பரவல் அச்சத்தால் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், விண்ணப்பங்களை அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள இந்நேரத்தில் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று ஓய்வூதியத்தை வழங்குகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்