ஆப்நகரம்

பென்சனர்களுக்கு இப்படி ஒரு வசதியா.. இது ரொம்ப ஈசியா இருக்கே!

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?

Samayam Tamil 27 Sep 2022, 5:13 pm
ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றுதான் வாழ்நாள் சான்றிதழ். எனவே, வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்சன் வராது.
Samayam Tamil pensioners


மத்திய அரசு, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவருமே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க பென்சன் அலுவலகத்துக்கு ஓய்வூதியதாரர்கள் அலைய வேண்டியிருந்தது.

எனினும், இப்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்கலாம். இதற்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital Life certificate) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தபால் அலுவலக சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

சுண்டி இழுக்கும் நவராத்திரி மீல்ஸ்.. IRCTC அறிவிப்பால் ரயில் பயணிகள் குஷி!
இந்திய தபால் வங்கி (India Post Payments Bank) ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களிடம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பெற்றுக்கொள்கிறது. இந்த சேவை வாயிலாக, ஓய்வூதியதாரர்கள் வீண் அலைச்சல் இல்லாமல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு முதலில் 155299 என்ற இலவச எண்ணை அழைத்து கோரிக்கை வைக்க வேண்டும். உங்கள் முகவரியில் தபால் காரர் வந்து வாழ்நாள் சான்றிதழை பெற்றுக்கொள்வார். இதற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்