ஆப்நகரம்

ஊரடங்கு தளர்வால் பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்!

வாகனப் போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்ந்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2020, 2:42 pm
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்து கணிசமாக முடங்கியது. இதனால் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மே மாதத்தில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வாகனப் போக்குவரத்து படிப்படியாக உயர்ந்தது.
Samayam Tamil பெட்ரோல் டீசல்


இந்நிலையில், மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக விற்பனை விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. எனினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என தொழில்துறை நோக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டில் இன்னும் பல பகுதிகளில் உற்பத்தியும், போக்குவரத்தும் குறைவாகவே இருக்கிறது.

அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் விற்பனை ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் 83 விழுக்காடு அதிகரித்து 1.6 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கு டீசலுக்கு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் டீசல் விற்பனை 69 விழுக்காடு உயர்ந்து 4.8 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் 90 விழுக்காடு, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன.

எல்பிஜி சிலிண்டர் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் 13 விழுக்காடு உயர்ந்துள்ளது. எனினும், விமானப் போக்குவரத்து இன்னும் முழுவீச்சில் இயங்காததால் மே மாதத்தில் விமான எரிபொருள் விற்பனை 85 விழுக்காடு குறைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்