ஆப்நகரம்

PF நாமினி அப்டேட்டில் பிரச்சினை: ட்விட்டரில் புகார் மழை!

பிஎஃப் கணக்கில் நாமினி அப்டேட் செய்வதில் தொடர்ந்து பிரச்சினை நீடிப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.

Samayam Tamil 24 Jan 2022, 9:41 am
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் புதிய விதிமுறை சமீபத்தில் அமலுக்கு வந்தது. 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் பிஎஃப் கணக்குதாரர்கள் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை திடீரென இறந்துவிட்டால் அவரது நாமினிக்குத்தான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வுசெய்வது கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கெனவே நாமினியைத் தேர்வுசெய்தவர்களும் அதை அப்டேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil pf


பிஎஃப் கணக்கில் நாமினியை இணைப்பது குறித்து பிஎஃப் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவிலும் தகவல் வெளியிட்டு வருகிறது. நாமினி பெயரை பிஎஃப் கணக்கில் அப்டேட் செய்வதற்கு https://www.epfindia.gov.in/ என்ற வெப்சைட்டில் வேலையை முடிக்கலாம். ஆனால் இந்த வெப்சைட்டில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து நிறையப் பேர் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.


நாமினியை இணைப்பதற்கு டிசம்பர் 31தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்ததாலும், இன்னும் நிறையப் பேர் நாமினியை இணைக்காமல் இருந்ததாலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் பிஎஃப் வெப்சைட்டில் நெட்வொர்க், சர்வர் பிரச்சினை இருப்பதாக ட்விட்டரில் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வருமான வரித் தாக்கல் வெப்சைட்டிலும் இதேபோலவே பிரச்சினைகள் நிறைய இருந்தன. இதனால் வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்