ஆப்நகரம்

PF பணம்: இதைச் செய்யலனா ரூ.7 லட்சம் காலி!

பிஎஃப் உறுப்பினர்கள் உடனடியாக இந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பலன் கிடைக்காது.

Samayam Tamil 7 Mar 2022, 6:07 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்களது கணக்கில் ஒரு நாமினியை தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும். நாமினி இல்லாவிட்டால் இறப்புக்குப் பின்னர் பென்சன் உள்ளிட்ட பயன்கள் கிடைக்காது. பிஎஃப் பணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். அதனால்தான் உறுப்பினர்கள் அனைவரும் நாமினியை தேர்ந்தெடுக்கப்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டிருந்தது. அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.
Samayam Tamil pf


ஏற்கெனவே நாமினியை தேர்ந்தெடுத்தவர்களும் புதிய நாமினியை அப்டேட் செய்யும் வசதி உள்ளது. நாமினியை தேர்வு செய்யவும், புதிய நாமினியை அப்டேட் செய்யவும் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக வேலையை முடிக்கலாம். UAN நம்பர் இருந்தாலே போதும். அதை வைத்தே அப்டேட் செய்ய முடியும்.

பிஎஃப் உறுப்பினர்கள் EDLI (தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீடு) திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரையில் பயன்பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் தொகை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். எனவே பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது நாமினியை அப்டேட் செய்வது மிக அவசியமாகும். அப்படி அப்டேட் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.

UAN நம்பர் இல்லாமலேயே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்!
இந்த அப்டேட் செய்வதற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது உறுப்பினர்களின் பிஎஃப் நம்பர், கணக்கு எண், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட எந்தவொரு ஆவணத்தையும் பிஎஃப் அமைப்பு போன் கால் வாயிலாகவோ வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவோ கேட்பதில்லை. எனவே இந்த விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்