ஆப்நகரம்

பிஎஃப் பணம்.. இனி ஒரு லட்ச ரூபாய் எடுக்கலாம்!

மருத்துவத் தேவைகளுக்காக பிஎஃப் சந்தாதார்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2021, 3:59 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் சாதாரண மருத்துவச் செலவுகளுக்குக் கூட மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சூழலில் பிஎஃப் சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனுமதி அளித்தது.
Samayam Tamil pf


கொரோனா தொடர்பான மருத்துவச் சிகிச்சைகளுக்கு அதிகப்பேர் தங்களது பிஎஃப் சேமிப்புப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிஎஃப் வித்டிரா விதிமுறைகளை பிஎஃப் அமைப்பு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் இனி மருத்துவச் செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இதற்காக மருத்துவச் செலவுகள் தொடர்பான ஆவணங்கள் எதையும் ஆதாரமாக வழங்கத் தேவையில்லை.

வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்... ஒரே பிரீமியம்தான்!!

இந்தச் சலுகை வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பிஎஃப் பணத்தை இதுபோன்ற அவசரத் தேவைகளுக்காக எடுத்துப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில், சேமிப்புப் பணத்தை இப்போதே எடுத்துவிட்டால் அதன் வாயிலாகக் கிடைக்கும் வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மருத்துவச் செலவுகளுக்கு வேறு வழியே இல்லை என்ற சூழலில் மட்டுமே எடுத்தால் நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்