ஆப்நகரம்

Pension Rules: பென்சன் ரூல்ஸ் மாற்றம்.. புதிய விதிகள் என்ன சொல்கிறது?

தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) மாற்றியுள்ளது.

Samayam Tamil 5 Jul 2022, 6:27 pm
தேசிய பென்சன் திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் தனியார் துறை ஊழியர்கள் உள்பட அனைவருமே தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
Samayam Tamil pension


அண்மைக்காலமாக தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்சன் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் குவியும் முதலீடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அண்மையில் மாற்றியுள்ளது.

இதன்படி, தேசிய பென்சன் திட்டம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் அத்திட்டத்தில் இருக்கும் ரிஸ்க் அளவை பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒரு பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை முதலீட்டாளர் தெரிந்துகொள்ள முடியும். இந்த விதிமுறை ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது அத்திட்டத்தில் ரிஸ்க் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல தேசிய பென்சன் திட்டம் சார்ந்த திட்டங்களில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax: வருமான வரித் தாக்கல்.. இதெல்லாம் ரொம்ப முக்கியம்!
இதன்படி, கீழ்காணும் ஆறு வகை ரிஸ்க் அளவுகள் தேசிய பென்சன் திட்டம் சார்ந்த திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • குறைவான ரிஸ்க் (Low risk)

  • குறைவான - நடுத்தர ரிஸ்க் (Low to Moderate risk)

  • நடுத்தர ரிஸ்க் (Moderate risk)

  • நடுத்தர - அதிக ரிஸ்க் (Moderately High risk)

  • அதிக ரிஸ்க் (High risk)

  • மிக அதிக ரிஸ்க் (Very high risk)

அடுத்த செய்தி

டிரெண்டிங்