ஆப்நகரம்

புதிய பென்சன் திட்டம் வரப்போகுது.. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

செப்டம்பர் மாத இறுதியில் உத்தரவாத பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் PFRDA திட்டம்.

Samayam Tamil 8 Aug 2022, 1:47 pm
2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தில் பிற்காலத்தில் தனியார் ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
Samayam Tamil pension


ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்!!!

அண்மைக்காலமாக தனியார் ஊழியர்கள் ஏராளமானோர் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்தது போன்ற நிலையான பென்சனும், இதர சலுகைகளும் தேசிய பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை என அரசு ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பரான திட்டம்.. முதலீடு 1527% உயர்வு!
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், உத்தரவாதத்துடன் ஓய்வூதியம் வழங்கும் உத்தரவாத பென்சன் திட்டத்தை (guaranteed pension scheme) கொண்டுவர திட்டமிடப்பட்டு வருவதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவாத பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என சுப்ரதீம் பந்தோபத்யாய் தற்போது தெரிவித்துள்ளார். தற்போது பென்சன் நிதியில் சுமார் 35 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதில் 22% தொகை (7.72 லட்சம் கோடி ரூபாய்) தேசிய பென்சன் திட்டத்தில் உள்ளது. 40% தொகையை EPFO நிர்வகித்து வருவதாகவும் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்