ஆப்நகரம்

கரண்ட் பில் சுலபமாகக் கட்ட மொபைல் ஆப் வசதி!

போன் பே மொபைல் ஆப்பில் அனைத்து வாடிக்கையாளர்களும் சுலபமாக மின் கட்டணம் செலுத்துவதற்குத் தேவையான வசதிகள் உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Samayam Tamil 24 Nov 2020, 4:31 pm
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவது கட்டணம் செலுத்துவது போன்ற பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற மொபைல் செயலிகள் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போன்பே செயலியில் மின் கட்டணம் செலுத்தும் வசதியில் அனைத்து மின் வாரியத் தொடர்புகளும் இணைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் அனைத்து 73 மின் வாரியங்களின் சேவைக்கு உட்பட்டவர்களும் போன் பே செயலி மூலமாக மின் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil phonepe


இதுகுறித்து போன் பே நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநரான அங்கித் கவுர் கூறுகையில், “2016ஆம் ஆண்டில் நாங்கள் முதன்முதலில் ஆப் மூலமாக மின் கட்டணம் செலுத்தும் சேவையைத் தொடங்கிய பிறகிலிருந்தே வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 40 சதவீதம் கூடுதலான அளவில் மொபைல் ஆப் மூலமாக மின் கட்டணம் செலுத்தியுள்ளனர். எங்களது வாடிக்கையாளர்களில் சுமார் 80 சதவீதத்தினர் இரண்டாம், மூன்றாம், நான்காம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நல்ல லாபம் தரும் சேமிப்புத் திட்டங்கள் இவைதான்!

வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவரும் வகையில் போன் பே நிறுவனம் பல்வேறு வசதிகளைக் கொண்டுவந்துள்ளது. மின் கட்டணம் செலுத்துவதிலேயே ரிமைண்டர் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் திட்டத்தையும் போன் பே நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. டிஜிட்டல் தங்கம் சந்தையில் 35 சதவீதப் பங்குகளுடன் போன் பே நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு ரூபாய் முதல் தங்கம் வாங்கும் திட்டம் போன் பே ஆப்பில் இருக்கிறது. கடந்த பண்டிகை சீசனில் மட்டும் டிஜிட்டல் தங்கம் விற்பனையில் ஆறு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டதாக போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்