ஆப்நகரம்

10,000 பேருக்கு வேலை: அள்ளிக் கொடுக்கும் போன் பே!

ஒப்பந்த அடிப்படையில் 10,000 பேருக்கு வேலை கொடுக்கப்போவதாக போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Sep 2020, 5:34 pm
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகிலிருந்தே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களில் மொபைல் செயலிகள் வாயிலான பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொள்கின்றனர். பேடிஎம், கூகுள் பே, போன் பே, ஃபிரீசார்ஜ் போன்ற செயலிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக அதிகமாக முதலீடு செய்தும் அதிகப் பேருக்கு வேலைவாய்ப்புகளையும் இந்நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் போன் பே நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil phonepe


சிறு கடைகள் மற்றும் வணிகர்களுடனான தொழில் ஒப்பந்தத்தில் பணியாற்றி வரும் குழுவில் புதிதாக 10,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படவுள்ளனர். தற்போதைய நிலையில் இக்குழுவில் சுமார் 8,000 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 11 மில்லியன் வணிகர்களுடன் தொழில் புரிந்துவரும் போன் பே நிறுவனம் இந்த எண்ணிக்கையை இரு மடங்கு உயர்த்தி, தொழிலை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 12 மாதங்களில் இந்த எண்ணிக்கையை 25 மில்லியனாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

EMI Moratorium: 2 ஆண்டுகள் நீட்டிக்கலாம் - ரிசர்வ் வங்கி ஹேப்பி நியூஸ்!

கொரோனா பாதிப்பு தொடங்கி ஊரடங்கு அறிவித்த பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்தன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகவே நடைபெறுகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களிலும் இரண்டாம் அடுக்கு மூன்றாம் அடுக்கு நகரங்களில்கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்ந்துள்ளதாக போன் பே நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தொழில் வளர்ச்சியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்ற ஜூலை மாதத்தில் மட்டும் போன் பே செயலியில் மொத்தம் 550 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்