ஆப்நகரம்

ரயில் தண்டவாளத்தில் மோதிக்கொள்ளும் ராகுல் - கோயல்!

ரயில் பயணிகளிடம் சுரண்டுவதாகக் கூறிய ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 25 Jul 2020, 5:54 pm
நாடு முழுவதும் கொரொனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
Samayam Tamil rahul piyush


இந்நிலையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் கடந்த 9ஆம் தேதி வரை ரூ.429.90 கோடி வருவாயை ரயில்வே துறை ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது எதிர்க்கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் கூட ஏழை எளிய மக்களை வைத்து மத்திய அரசு வருவாய் ஈட்டிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளனர். இது குறித்த ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

சூப்பர் சலுகை: தங்கக் கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி!

அதில், “இந்தியாவையே சுரண்டிக் கொண்டிருந்தவர்கள்தான் இப்போது அரசு வழங்கும் மானியத்தை வருமானம் ஈட்டுவதாக விமர்சிக்கிறது. ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்காக மத்திய அரசு அதிகளவில் செலவு செய்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான செலவுகளை சோனியா காந்தி ஏற்பதாகக் கூறினாரே அது என்ன ஆச்சு என்று மக்கள் இப்போது கேட்டுக்கொண்டிருக்கின்றனர்” என்று பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு 1.10 கோடி வீடுகள்!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான ரயில் போக்குவரத்து செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று சோனியா காந்தி கூறியிருந்தார். இதுபோன்ற சூழலில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மக்கள் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும் போது அதில் ஆதாயம் காண அரசு முயற்சிக்கிறாது என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்காக அரசு தரப்பிலிருந்து ரூ.2,142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்